Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, October 12, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 24


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 

திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

முறைகள்:

  • உள்ளத்தின் உண்மையை ஓரிழை உயர்த்து.
  • பிடி கொடுக்காமல் பேசுவதைத் தவிர்.
  • வெட்கப்படக்கூடிய காரியங்கள் மீது ஆசைப்படாதே.
  • ஆபத்தை அறைகூவி அழைக்காதே.

இன்றைய பகுதியில் மேற்கண்ட முறைகளுக்கான (Practices / Methods), கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 

 -----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை:

உள்ளத்தின் உண்மையை ஓரிழை உயர்த்து.

முறைக்கான விளக்கம்:


உள்ளத்தின் உண்மை நேரம் வந்தால் அதற்குத் தகுந்தபடி மாறும்; அதாவது கூடும் அல்லது குறையும்.

உண்மையுண்டுஎன நாம் நினைப்பது, நேரம் வந்தால்தான் தெரியும். 13,500 ரூபாய் சம்பளம் என்பதை 14 ஆயிரம்எனக் கூற எழும் ஆசை உண்மையில்லை.

என் தகப்பனார் இலஞ்சம் வாங்குவார் என்பதைக் கூறவேண்டிய நேரம் வந்தால் நம்மனம் படும் போராட்டம் தெரியும். முடிவில் வருவது உண்மையாக இருக்காது. அந்நேரம் நமது பேச்சுத்திறமை நமக்கே வியப்பாக இருக்கும்.

அப்படியெல்லாம் இல்லை;
எனக்கு அது தெரியாதே;
சும்மா பெறுவதில்லை, வேலைக்குப் பலன்தானே;
தகப்பனார் வாங்கமாட்டார், மற்றவர் கட்டாயப்படுத்துவார்கள்;
பார்ட்டி வம்பு செய்து தந்தால் எப்படி மறுப்பது?

உண்மை நேர்எதிராக இருக்கும்.

இதில் இரகஸ்யம் என்னவென்றால் உள்ளதுஎன நாம் நினைப்பதைக் காப்பாற்றுவதே சிரமம். உயர்த்துவது நடவாத காரியம்எனப் புரியும்.

அதனால்தான் ஷேக்ஸ்பியர் "இருப்பதை உயர்த்த முயன்றால், உள்ளதும் போகும்'' என்றார்.

உயர்த்துவது சிரமம். 1% உயர்த்துவதும் அதனால் முக்கியம் பெறும்.

தொடர்ந்து மாதம் ஓரளவு உயர்த்துவது, 6 மாதத்திற்கொரு முறை உயர்த்துவது என்பதும் கடினம். தினமும் 1% அல்லது 1/10%ஆவது உயர்த்த முயல்வது முறை.

உண்மையை உயர்த்த முயன்று வெற்றிபெற மற்ற எல்லா விஷயங்களையும் உயர்த்த வேண்டும்என்பது இப்பொழுது புரியும்.

10 வார்த்தையில் சொல்ல வேண்டிய பதிலை 20 வார்த்தையில் சொல்கிறோம். பணம் உள்ளபொழுதும் போன் பில் கடைசி தேதிவரை காத்திருந்து கட்டுகிறோம். இதுபோல் அலட்சியமானவற்றை விலக்காமல் உண்மையை ஓரளவு உயர்த்த முடியாது.

எது உண்மை?

எனக்குள்ள நிலம் 102.48 ஏக்கர் என்பதை 100 ஏக்கர் என்றால் உண்மையில்லை; 102ம் உண்மையில்லை. 102.48 எனச் சொல்வது உண்மையா என்றால்,

எந்த மனநிலையில் சொல்கிறோம் என்பதே முக்கியம்.

100க்கும் 102.48க்கும் நமக்கு ஆதாயமில்லை;

அதில் பொய் பெறும் இலாபமில்லை. அது பொய்யாகாது.

ஓட்டு யாருக்குப் போடுவது என்ற உண்மையை வேட்பாளரிடம் கூறும்பொழுது மனம் போராடும். அங்கு உண்மை வெளிப்படுவது கடினம்.

உங்களுக்கில்லை என்பதை உண்மையாகச் சொல் பிரச்சினையை எழுப்பலாமா?

"கேட்க உங்களுக்கு உரிமையுண்டு. யாருக்குப் போடவேண்டும் என்ற சுதந்திரம் எங்களுக்கு வேண்டும்'' என்று கூறலாமா?

"முடிவு செய்யவில்லை'' என்று சொல்லலாமா?
"அவசியம் உங்களுக்கே போடுகிறேன்'' என்று பொய் சொல்ல ஆசைப்பட்டுச் சொல்வது பொய். ஆசை பொய் சொல்லும்.

"உங்களுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்பது அவசியம்'' என்பது சாதுர்யமான பதில்.

எதையும் மனம் கருதாவிட்டால் வேட்பாளர் நம்மை வற்புறுத்தமாட்டார் என்பது ஓர் உண்மை.
அவருடன் வருபவர் நாம் சொல்ல வேண்டியதைச் சொல்வார், "நீ கேள்.

அவர் இஷ்டத்தைக் கேட்காதே'' என்பார்.

அன்னை நமக்குப் பொய் சொல்லும் சந்தர்ப்பம் தரமாட்டார்.


                            -------------------------------------------------

முறை :

பிடி கொடுக்காமல் பேசுவதைத் தவிர்.


முறைக்கான விளக்கம் :


பிடி நம் கையில் இல்லாவிட்டால் வாழ்வு தெளிவுபடாது.


எந்த பேரத்திலும் இரு சாராரும் தங்கள் பிடியை விடாமல் பேசுவர்.


கர்மம் செயல்படும் வாழ்வுக்கு அது சட்டம்.


அருள் செயல்படும் உயர்ந்த வாழ்வுக்கு பிடியை நாமே விட்டுக்கொடுப்பது சட்டம்.


பிடி என்றால் என்ன? வரையறைக்குட்பட்ட வாழ்வுக்குரியது பிடி.


பேச்சு எழுத்திலில்லாவிட்டால் பொய் சொல்ல வாய்ப்புண்டு.


அதனால் எழுத்து அவசியம்; அது பிடி.

அப்படிப்பட்ட பிடியை இரு முறை இரண்டு பேரிடம் விட்டுக்கொடுத்ததால் 1/2 பங்கு இலாபம் என்ற பேச்சு முழுச் சொத்தாகவும், 1/3 பங்கு லாபம் முழுச் சொத்தாகவும் மாறியது.

பிடியை விடாவிட்டால் உள்ளது கிடைக்கும்.

பிடியை வலிமையிருந்து பண்பாக விட்டுக்கொடுத்தால் உபரியாக வரும்.

கணவன் மனைவியிடையே இருவரும் பிடியைப் பாராட்டாவிட்டால் வாழ்வு மனம் நிறைந்த வளமாக இருக்கும்.

NPT (Nuclear Proliferation Treaty) அணுகுண்டு பரவுவதைத் தடுக்கும் ஒப்பந்தம்: அமெரிக்கா எவரும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாதுஎனக் கேட்கிறது. ஆனால் தான் மட்டும் அந்தச் சட்டத்திற்கு உட்படாதுஎன்று கூறுகிறது. இது பிடியை விடாமல் செய்யும் பேரம்.

"அனைவரும் எல்லா அணுகுண்டுகளையும் அழித்துவிட்டு இனி அவற்றைத் தயாரிக்கமாட்டோம்'' என்று முடிவு செய்யக் கேட்பது அறிவுடைமை; பிடியை விடுவதன்று. பிடியை விடுவது என்றால், குருஷேவ் "ரஷ்யா அணுசோதனை செய்யாது'' என தானே செய்த முடிவு பிடியை விடுவது.

வட்டிக்கடைக்காரன் சொத்து வாங்கும்பொழுது விற்பவனை "எனக்கு இந்த விலைக்கு விற்கச் சம்மதிப்பதாக'' எழுதிக் கேட்பான். ஒப்பந்தம் இருவரும் பொறுப்பேற்கவில்லையெனில் செல்லாது. பணம் பேசுகிறது.

அது உன் பிடியை என்னிடம் கொடு' எனக் கேட்டது.

இன்று போய் நாளை வா என்பது பிடியை விடுவது.

பிள்ளைவீட்டார் எதுவும் கேட்காதது பிடியை விடுவது.

இதன் பலனை அனுபவிப்பவர் நன்றியை உணராமல் இப்பொழுதெல்லாம் எவரும் எதுவும் கேட்பதில்லை' என்பது பிரச்சினையை உற்பத்தி செய்வது.

பிடியை விடுவது சரி.

அதைப் பாராட்டுவது அவசியம்.

எவரிடமும் பிடியை விட்டுக்கொடுப்பவரிடம் எல்லோர் பிடியும் தானே வந்து சேரும்.

சமர்ப்பணம் என்பது நம் பிடியை விடுவதாகும்.

                                     ----------------------------------------
முறை :

வெட்கப்படக்கூடிய காரியங்கள் மீது ஆசைப்படாதே.

முறைக்கான விளக்கம்:

ஆசை எழுவது வெட்கப்படக்கூடியதின் மீதே எழும்.

அதனால் ஆசை வெட்கமறியாது' என்றனர்.

தன்னைப் போன்ற மாமன் மகளை உன் வீட்டை எனக்குக் கொடு' எனப் பல்கலைக்கழக ஆசிரியர் கேட்டார்.

தொழில் ஆரம்பித்து மானேஜரை நியமித்தவுடன் இத்தொழிலை எனக்கே கொடுங்கள்' என்றார் ஒரு புண்ணிய ஆத்மா.

2 வீடு பெற்றுள்ள பேராசிரியர் வீடில்லாத பள்ளி ஆசிரியரை நீங்கள் வாங்கிய வீட்டை என் நண்பருக்குப் பரிசாகக் கொடுங்கள்' என்றார்.

என்னைப் பிரதமராக்குங்கள்' என்றார் ஒருவர்.

சினிமா நடிகையை மணக்கக் கனவு காணும் கிராமத்து இளைஞர்கள் உண்டு.

இவற்றைச் சொல்ல வெட்கப்படுபவர் உண்டு, வெட்கப்படாதவருண்டு.

பரம்பரையாக ஏழ்மையாக இருந்தவருக்கு இந்த எண்ணம் தோன்றும். ஏழ்மையுடன் தன் ஜாதியால் தன்னை உயர்வாக நினைப்பவர் வெட்கமில்லாமல் கேட்பார். கேட்பதுடன், எனக்கு நீ இந்தச் சேவை செய்வது உனக்கு நான் செய்யும் ஆசீர்வாதம்' எனவும் வாய்விட்டுக் கூறுவார்.

மனிதன் என்ற நிலைக்கு வரமுடியாதவர் மனநிலையிது.

நம்முள் ஓரளவு இருக்கலாம். இருந்தால் அதைக் களைவது உத்தமம். திருவுருமாற்றுவது யோகம்.

10 ரூபாய் கடன் பெற நகையை அடைமானம் வைக்க 10 நடை நடந்தவருக்கு 1000 ரூபாய் லோன் அவர்கள் ஊரில் கொண்டுவந்து கொடுத்த பாங்கை ஏன் எங்கள் வீட்டில் கொண்டுவந்து கொடுக்கக் கூடாது?' என்று கேட்டார்.

இலஞ்சம் வாங்குபவன் நான் செய்யும் சலுகைக்குப்பதிலாக பெறுவது இலஞ்சம் என்பார்.

கொஞ்ச நாள் கழித்து அவன் தன் மனத்தைச் சோதித்தால் யாரிடம் பணமிருந்தாலும் அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும்என நினைப்பது தெரியும்.

வழக்கமாகக் கடன் பெறுபவரும் அப்படிப்பட்ட மனநிலையுள்ளவரே. தன்மானம், கௌரவம் மனதில் ஏற்பட்டால் இவை அழியும். நான் ஒரு மனிதன், எனக்கு ஒரு கௌரவம் உண்டு என்பது தன்மானம்.

எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்பவர் இப்படித்தான் வாழவேண்டும் என்று முடிவு செய்தால் தன்மானம் எழும்.

அதற்குப் பிறர் வெட்கப்படக்கூடியதைச் செய்யும்பொழுது நம் மனம் அதைக் கண்டிக்க வேண்டும்; அதற்கு வெட்கப்பட வேண்டும்.

இவற்றை நாம் நம்வீட்டில் ஆரம்பிக்க வேண்டும்.

நாம் செய்வது கால் பங்கு என்றால் வீட்டார் செய்வது முக்கால் பங்காக இருக்கும்.

நாம் செய்வதை அறவே அழித்துவிட்டு நம்வீட்டார் செய்வதை நாம் செய்வதுஎன ஏற்றுக்கொண்டால் வழி பிறக்கும்.

நெறி உயர்ந்தது, கடுமையானது.

மனம் உயர்ந்தவர்க்கு இயல்பானது; மனம் தாழ்ந்தவர்க்குக் கடுமையானது.

வாய் ஓயாமல் பேசுபவரைப் பேசாமலிருக்கச் சொன்னால் தலை வெடித்துவிடும்.

முறை பெரியது; செய்தால் பலிக்கும்.

பலிப்பது பெரிய விஷயம். பலிப்பது விஷயமன்று; அன்னை.

மனம் நெறியை ஏற்றுப் போற்ற வேண்டும்.

இவையெல்லாம் எனக்கில்லை என்பவருக்கு இவை பலிக்கவே பலிக்கா.

                      ---------------------------------------------------------------------------

முறை:

ஆபத்தை அறைகூவி அழைக்காதே.


முறைக்கான விளக்கம்:

குரங்கு ஆப்பைக் கழற்றி அவதிப்பட்டது கதை.

அதைச் செய்யாமலிருக்க, குரங்கால் முடியாது.

இதையே நாம் தவறாமல் செய்வதை நாமறிவதில்லை.

ஊரை ஏமாற்றிச் சொத்துச் சேர்த்தவனை நாடி பெருந்தொகையை வியாபாரத்தின் பேரில் கொடுத்தவர், தான் செய்ததை அறியார்.

உதவியைக் கெஞ்சி கேட்பவரும் உதவி பெற்றபின் நமக்கு ஊறு செய்ய முடியும் என்று தோன்றுவதில்லை. எது எப்படியானாலும் நிலைமை மாறி நாம் ஒருவருக்கு அடங்க நேரிட்டால், அவரால் நமக்குத் தீங்கு செய்ய முடியும் என்றால் அவருக்கு உதவக்கூடாது என்பது விவேகம். இந்த விவேகமற்றவர் உதவியால் உபத்திரவம் பெறுவர்.

இது ஆபத்தில் மாட்டிக்கொள்வதுஎனத் தெரிவதில்லை.

இது கருதி பிறன் கையிற் கொடுத்த பேதை' என்றனர் இப்படிப்- பட்டவரை.

மனிதனை நம்பாமல் நிலைமையை நம்புவது உலக ஞானம், விவேகம்.

விவேகமில்லாதவர் பெரிய உதவிசெய்ய முன்வரக்கூடாது.

அப்படிப்பட்ட நிலை வந்தால், இது பெரிய விஷயம், நான் சிறிய மனிதன்' என விலக வேண்டும். அப்படியில்லையெனில் இந்த இடத்தில் அடிமட்டமான மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியும் என யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் யோசனை செய்தால், யோசனைதான் செய்யலாம், வாழ்க்கையை நடத்த முடியாதுஎனத் தோன்றும்.

இது சரியில்லை என்றால், இதே துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தால், அவர்கள் இந்த எச்சரிக்கைகளை மேற்கொள்வார்கள்.

பெருந்தொகையைப் பிறர்க்குக் கொடுக்க ஒரு சட்டம் உண்டு. அது
ரசீது பெற்றுக் கொண்டு தரவேண்டும் என்பது. நான் எப்படி அண்ணனிடம் ரசீது கேட்க முடியும் என்றால், கேட்காதது பண்பு. ஆனால் இந்தத் தொகை எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யும் என நமக்குத் தெரியாது. அண்ணன் மகனும், நம் மகனும் சண்டையிட்டுக் கொண்டால் அடுத்தாற்போல் அண்ணன் மைத்துனன் "எப்படி அத்தொகையை வாங்குவான் எனப் பார்ப்போம்'' என்பார். அது பிரச்சினையாகும். நாம் கொடுத்த பணம் பிரச்சினையானபின் இப்படியாகும்என்று தெரிந்தால் ரசீது பெற்றிருப்பேன்' எனத் தோன்றும். தொகை எதுவானாலும், அண்ணன் முக்கியம், கேட்கமாட்டேன்' என்பது பெருந்தன்மை. பிரச்சினைக்கும் தொகைக்கும் சம்பந்தமில்லை. அது இல்லையென எப்படிச் சொல்வது? அதை உடனே கொடுத்துவிடுகிறேன். முடியாவிட்டால் நானே ரசீது எழுதி அனுப்புகிறேன்' என்று கூறும் அண்ணன் பண்புள்ளவன்.

சமர்ப்பணம் சந்தர்ப்பத்தால் ரசீது பெறச் செய்யும்.


அண்ணன் உறவைவிட தொகை பெரியதானால் தொகைக்குரிய


முறையைக் கடைப்பிடிப்பது சரி. அதை உதாசீனம் செய்வது

ஆபத்தை அறைகூவி அழைப்பதாகும்.

வாழ்வின் சிக்கல்கள் ஏராளம்; பாசம், பிரியம், பழக்கம் ஆகியவை எளியவை. எனவே வாழ்வுக்குரிய முறைகளைத் தவறாமல் பின்பற்றுவது ஆபத்தை விலக்குவதாகும்.

நல்லது, பண்பு, உயர்ந்த செயல் என்பவை அந்த நேரத்திற்குச் சரி. 

நெடுநாளைக்கு அவை பயன்படா. முறை, ரசீது, சட்டம், ஊர், ஒழுங்கு ஆகியவை பேசும். ஆபத்தைத் தேடுவது இதில் ஒரு முறை; பல உண்டு.

எதையும் நேராக, அனைவருக்கும் பொதுவாக, எந்த நாளைக்கும் சரிவரும்படிச் செய்வது ஆபத்தைத் தடுக்கும்.
 ஆபத்தை விலக்குவது அவசியம்.


Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்


Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India


Tags: Sri Aurobindo, Sri Annai, Mother, Yoga Sakthi, Methods, Pratices, Karmayogi, Philosophy, Sri Aravindar, Sri Annai, character, transformation, Yoga, Yoga Sakti in life, 

No comments:

Post a Comment

Followers